புகைப்பட பிளாக்

நாங்க டூர் போனப்போ நிறைய படங்களை க்ளிக்கினேன்..அதில் நான் நல்லாருக்குன்னு நினைச்சதை உங்கள் பார்வைக்கு புகைப்பட பிளாகில் வெச்சிருக்கேன்.. இப்போ டிஜிடல் கேமேரா இருப்பதாலே.. filim வேஸ்டாயிடும்ன்னும் யோசிச்சு-யோசிச்சு க்ளிக் பண்ணரதெல்லாம் .. கனவு மாதிரி இருக்கு…

கண்ணுக்கு பிடித்த காட்சியை மானாவரியா க்ளிக்க வேண்டியது தான்..எது உத்தமமோ..அதை மட்டும் பத்திரப்படுத்தி (சி.டி லே பதிவு செஞ்சு) மத்ததெல்லாம் நீக்கவேண்டியது தான். டிஜிடல் கேமேறா வந்ததுலே..என்னை மாதிரி Trial-and error லே கத்துக்கிரவங்களுக்கு பொட்டோ-பிலிம் ஐ கரியாக்கறோமேன்னு நெருடல் இல்லாம க்ளிக்கலாம்

எல்லாரும் என்னோட Photo-Exibition க்கு வாங்க.. உங்க அபிப்பிராயத்தை மறக்காம சொல்லுங்க.

ஒரே நாளில் 2 சினிமா ! ! !

சென்னை-28″ ரிலீஸ் ஆனவுடனே பார்க்கணும் ன்னு அப்பிடி ஒரு வெறி…( உபயம்:- தமிழ்நாட்டு தோஸ்த்ஸ்)…பெங்களூர்லே ஹவுஸ்புல்லா ஓடர இன்னொரு படம் “முங்காரு-மலே” (mungaaru – male)..அதாவது “Pre-monsoon Showers”.இதுக்கும் ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டு இருந்தோம்..எங்களுக்கு ஒரு தடவை பார்க்கவே டிக்கெட் கிடைக்கலை..எப்படி கிடைக்கும்..அவன்-அவன்..இதை 2-3 வாட்ட ஜோடி-ஜோடியா பார்க்க வறாங்க…

9.00 am லிருந்து லைன்லே நின்னு ( phone-line தான்.. நம்மால அங்க போய் Line லெ நிக்கமுடியாது).. ஒருவழியா 9.45 க்கு டிக்கெட் கேட்டா,. எங்க நேரம்.. ரெண்டு படத்துக்கும் ஒரே நாள் டிக்கெட் இருக்குன்னு போன் எடுத்த பரதேவதை சொன்னப்போ..கண்ணு இருண்டு போச்சு… தாய்மொழிக்கு முன்னுரிமை குடுத்து “சென்னை-28” க்கு புக் பண்ணரதா.? ? ?.. இல்லை.. நமக்கு புவா கொடுக்கும் மொழிக்கு விசுவாசமா இருந்து Mungaru-Male க்கு புக் பண்ணரதா…?

இதெல்லாம்… phone லே இருக்கும் புண்யவதிக்கு எங்கே தெரியுது…'””மேடம்.. சீக்கிரம் சொல்லுங்க..எதுக்கு புக் பண்ண.. எனக்கு வேறேயும் call-waiting இருக்கு… சொல்லமுடியாதுன்னா.. வீட்டுலே discuss பண்ணி அப்புறமா போன் பண்ணுங்க “””..ன்னு சொல்லறா..45 நிமிஷம் கை வலிக்க லைன்லே நின்னிருக்கேன்.. மறுபடியும் call பண்ணணுமா.. நினைச்சாலே கை-வலிக்குது.

அப்பிடி-இப்பிடி timings விசாரிச்சப்போ கொஞ்சம் சமாதானம் ஆச்சு ஏன்னா.. மத்தியானம் 1.05 show க்கு “”சென்னை-28 “” ம்… சாய்ங்காலம் 4.30 show க்கு “”Mungaru-Male”” கும் டிகெட் எடுத்தாச்சு.. “”””அய்யோ.. தீபா… நீ பதிவெழுத ஆரம்பிச்சதிலெயிருந்து எங்க்ளுக்கு வேலை பளு ஜாஸ்தி..இதுலெ ஒரே நாள் ரெண்டு சினிமாவா…ஆத்தா..கொஞ்சம் கருணை காட்டு..” ன்னு…என் ரெண்டு கண்களும் கதற கதற சொல்லரது மாதிரி ஒரு பிரம்மை… 🙁 ஒருவேளை கண்ணுக்கு வாயிருந்தா இப்படி தான் சொல்லியிருக்குமோ..:-?

வீட்டுலே இதை சொன்னப்போ.. முதல்லே ஷோக்கானாங்க.. அப்புரம்.. டிகெட் கிடைச்ச சந்தோஷத்துல.. ஷோக் மறந்து போச்சு.ஒரே நாள் ரெண்டு படம் பார்க்கறோம்ன்னு கொஞ்சம் கூட நாங்க வருத்தபடலை…

கால்-மேலே-கால் போட்டு.. டாப்-10 பாணியில் படிக்கவும்…….”சென்னை- 28″ .ரொம்பவே சூப்பர்.. இன்னொரு முறை டிகெட் கிடைச்சா…கண்டிப்பா பார்க்கலாம்.. மேலும் இந்த படத்தை நிறையபேர் விமர்சனம் பண்ணிட்டதால .. அடுத்த படமான ” Mungaru-Male” யை குறித்து பேசலாம்”””….பேருக்கு ஏத்த மாதிரி Pre-Monsoon showers ( …இதுக்கு தமிழில் என்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்).. சூப்பர் இல்லைன்னாலும் நல்லாவே இருந்தது…அப்புறம் ஏன் housefull ன்னு தானே கேக்கரீங்க.. இது பாட்டுக்காகவே ஹிட்டான படம்…. கன்னடம் புரியும்ன்னா… கண்டிப்பா.. உங்களுக்கு இந்த படத்திலே இருக்கும் பாட்டு எல்லாமே பிடிக்கும்… ட்மால்-டுமீல்ன்னு drums எக்கச்சக்கமா இல்லாம.. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது மழையிலே நனைஞ்சு வந்த சுகம்…Mungaru-Male:::மழை…..

இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு… “anisuthide”” (எண்ணுகிறேன்..) இதை கேட்டதும் Mohd.Rafi பாடிய तॆरी..आनखॊं के सिवाय .. दुनिया में रखा क्या हैं.. கேட்ட ஒரு effect.. என்னடா.. தமிழ் பதிவிலெ கன்னடம் – ஹிந்தி பாட்டை சொல்லெறேனேன்னு தானே யொசிக்கரீங்க..நான் அதிகம் தமிழ் பாட்டேல்லாம் கேட்டதில்லை.. கேட்க வாய்ப்பு கிடைக்கலைன்னுகூட சொல்லாம். இந்த Anisuthide பாட்டை கேளுங்க…( கன்ண்டம் தெரிஞ்ச நண்பர்கள் இருந்தா word-to-word..meaning கேட்டு தெரிஞ்சுக்கோங்க).. இதே மாதிரி தமிழில் எந்த mood-song உங்களுக்கு நினைவுக்கு வருதுன்னு சொல்லுவீங்களா… கேக்கணும்ன்னு ஆசையா இருக்கு

அங்கிலத்தில் என் கவிதை பதிவு

நான் புதுசா ஆங்கிலத்தில் ஒரு கவிதை பதிவு ஆரம்பிச்சிருக்கேன்..உங்கள் எல்லாரையும் வரவேர்க்கறேன்

வந்து பாருங்க..படிங்க.. பிடிச்சிருக்கா ன்னு சொல்லுங்க

தொடுவானத்திலும் பதிவுகள் தொடரும் 🙂

பஞ்ச விசித்திரம்

டந்த சில நாளா.. நானும் மைக்ரொவவ்(ர்) கொஞ்சம் பிசி…மைக்ரொவேவவ்(ர்) சொல்ல…சொல்ல.. அவர் சுயசரிதைய்யை 3 பாகம் முடிச்சிருக்கேன்.நாங்க பாட்டுக்கு..எந்த வித controversy லெயும் சிக்காம் தேமேன்னு இருந்தப்போ தான் ஒரு திருட்டுபயல் வந்து குட்டைய்யை குழப்பிவிட்டு போயிட்டான்..

ஹ்ம்ம்.. Reel யும் திருடறாங்க..Reality லெயும் திருடறாங்க.. Virtual Reality யும் திருடறாங்க…ஹ்ம்.. இப்பிடி நாம கஷ்டப்பட்டு உருவாக்கின hacks ஐ எவனோவந்து லவுட்டிக்கிட்டு போனா…:((…நொன்து நூலா போயிட்டேன்

“தீபா… நம்ம சுயசர்தைய்யை கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம்…இப்பொ நீ இருக்கிர மன-நிலையிலே உன்னால என் சுயசரிதையிலே கவனம் செலுத்த முடியாது..அதனால..ஏதாவது லைட்டா எழுத டிரை பண்ணு…” அப்பிடின்னு சொன்னப்போ தான் எனக்கு CVR சொன்னது ஞ்யாபகம் வந்தது

இதோ TAGGED விளையாட்டு விதிமுறைப் படி என்னை குறித்து 5 விஷயங்கள் ( இதெல்லாம் விசித்திரமா இல்லையான்னு படிச்சு பார்த்து கமெண்ட்டுலே மறக்காம சொல்லுங்க….அட எனக்கும் ஒரு feedback வேணுமிலே ) 1. காலையில் எழுந்தவுடன் எனக்கு காப்பி – டீ – anything else கட்டாயமாக நிர்பந்தம் இல்லை

சில பேருக்கு காலங்கார்த்தாலே ப்ல்-தேச்சவுடனே (சில பேருக்கு பல் தேக்காமலே) பெட்ரோல் போட்டா தான் அன்னிக்கி காலை-கடன்களுக்கு வண்டியே ஓடும்… நனமக்கு அப்பிடியெல்லாம் இல்லைங்க

படிக்கிர காலத்திலே.. அம்மா சூடா பால் கொண்டுவந்து டேபிள்லே வைச்சிட்டு “”மற்க்காம் குடி”” ன்னு தான் சொல்லுவாங்க..ஏன்னா ரெகார்ட் டிராயிங்ஸ் வரையிர மும்மரத்திலே அதை குடிக்கவே மறந்து போயிடுவேன் (நான் zoology ஸ்டூடென்ட் ஆக்கும்)

திருமணமான புதிதில் எங்க மாமியார் “”என்னம்மா நீ காலையிலே எதுவுமே குடிக்கமாட்டேங்கிராய்… உனக்கு இந்த பால் பிடிக்கலைன்னா சொல்லு..வெறே வரைட்டி மாத்திடலாம்.. உனக்கு காப்பி – டீ பிடிக்கலைன்னா சொல்லு.. காம்பிளான்.. ஓவல்…இதுமாதிரி ஏதாவது பழக்கம் இருக்குன்னா சன்கோஜ படாம சொல்லு…அப்புறம் உன்னை நாங்க செரியா கவனிக்கலைன்னு உங்க வீட்டுலே நினைக்கப்போராங்க”…அப்பிடீன்னு கண்கலங்கிட்டாங்க

அப்புறம் எங்க அம்மா-சித்தி -பாட்டி எல்லாரும் “இவளுக்கு இந்த பழக்கமே கிடையாது” ன்னு certificate குடுத்ததுக்கப்புறம் என் மாமியார் சொன்னாங்க “” நான் என்னமோ..ஏதோன்னு பயந்து போயிட்டேன்….நல்லவேளை..என் வயித்திலே பால் வார்த்தீங்க”

2. நான் எழுதும் how-to-do பதிவுகளை நானே google பண்ணி பார்ப்பேன்

இது ஒரு பொழுதுபோகா ஆரம்பிச்ச விஷயம்…புதுசா ஆங்கிலதிலே How-To-Do பதிவுகள் போட ஆரம்பிச்சப்போ…google search லே என்னோட பதிவுகள் வருதா…அப்பிடி வந்துதின்னா எத்தனாவதாக வருது .. main search page லே என் பதிவை பார்க்கிரப்போ… எனக்கு ஒரு அலாதியான குஷி

இப்போ இதை இன்னும் தெளிவா…ஒரு முக்கிய கடமையா தினமும் பண்ணரேன்….அப்பிடி பண்ணினதால் தானே…ஈ-அடிச்சான்-காப்பி அம்பலம் ஆச்சு… ஹ்ம்ம்..இதை பத்தி பேசினேன்னா அப்புறம் நிறுத்தவே மாட்டேன்…அடுத்த விசித்திரத்துக்கு வருவோம்

3. நான் ஆங்கிலத்திலே கவ்தை (மாதிரி) எழுதுவேன்

அடங்கோப்புறானெ சத்திய்மா நான் கவிதை (மாதிரி) எழுதுவேனுங்க..ஏதோ மனசுக்கு பட்டதை எழுதுவேன்… Rhyme – Rythm எல்லாம் அப்பப்போ இருக்கும்…அப்பப்போ இருக்காது… சந்தேகமா இருக்கா…MIND BLISS ன்னு ஒருத்தர் தினமும் ஒரு கவிதை பதிவு போடுவார் (அவரும் தமிழர் தான்)..அதிலே என்னோட முதல் கமேண்ட்டும் ஒரு கவிதை தான்…அவருடைய ஒவ்வோரு கவிதையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்…என்னோட பாராட்டை வேறும் வார்த்தையிலே ச
ொல்லுவதை விட கவிதையிலே சொல்வது உத்தமம்ன்னு எனக்கு படுது…அப்படியே சொல்லிவருகிரேன்

4. என்னுடைய salwar kameez க்கெல்லாம் செல்போன் வெச்சுக்க பாகெட் உண்டு

இதை சொல்லி நான் ஏர்க்கணவே ஒரு பதிவு போட்டிருக்கேன்…பாவம் நான் போனாலே என் tailor அலறியடிச்சு ஓடறார்…

என்ன தான் சொன்னாலும்.. பாவம்.. நான் சொல்லுவதை பொறுமையா கேட்டு…நான் அவருக்கு குடுக்கிர வரைபடத்தை எவ்வளவு தூரம் practical லா impliment பண்ணமுடியுமோ…சிரமம் எடுத்து எனக்கு தெச்சு குடுப்பார்..கடந்த 4 வருஷமா பாகெட் ஸல்வார் யூஸ் பண்ணறேன்… hand-bag ஐ வீட்டிலே வைச்சிட்டு…ஹாய்யா கை-வீசம்மா கை-வீசு ன்னு பாட்டு பாடிகிட்டே (மனசுக்குள்ளே தான் ) ரோட்டிலே நடக்கறேன்

5. பெரியவங்க கூட்டத்திலே என்னை தேடவேண்டாம்

இது family politics லெயிருந்து தப்பிக்க நானே கண்டுபிடித்த யுக்த்தி

நாங்க தமிழர்களேயானாலும் அப்பாவுக்கு transferable job ன் காரணாத்தால்…படித்ததேல்லாம் west-india ல்..அதனாலே.. எப்பவாவது.. cousin கல்யாணங்களுக்கு ஊருக்கு வரும்போது..ஏதாவது சகஜமா சொல்லப்போய்.. அது வேறே ஒரு cousin க்கு பிடிக்காம … மனசு கஷ்டப்பட்டு…”அவ வேளியூரிலேயிருந்து வந்திருகா ..அதான் அப்பிடி பேசுகிராள்”… ன்னு ஒரு போடு போட்டப்போ நான் அப்பிடியே பிரமிச்சு போயிட்டேன்..

அன்னிக்கி தீர்மானம் பண்ணினேன்…ஆகா…நமக்கு இப்பிடி ஒரு முத்திரை குத்தியாச்சு… இனிமே என்ன பண்ணினாலும்..இவங்க மனசிலேயிருந்து இது அழியப்போறதில்லே…ஸோ… safe ஆ இருக்கணும்ன்னா….நண்டு-சிண்டுகளேட விளையாடவேண்டியது தான்

இதிலே இன்னொரு advantage ம் இருக்கு….”” இந்த வாநரப்படைய என்ன பண்ணினா தேவிலை ” ” ன்னு பெரியவங்க அவசர-அவசரமா கோபப்படும்போது…நான் அவங்களுக்கு ஒரு ray of hope மாதிரி தெரிஞ்சேன்….அது மட்டுமில்லே… எப்பவோ வருஷத்துக்கு 1-2 தடவை ஊருக்கு வருவதாலே…நண்டு-சிண்டுகளுக்கும்….””இந்த அக்கா கிட்டே நல்ல பேர் வாங்கி நாம் எப்பிடியாவது இவங்க favourite ஆயிடணும்”” ங்கிற நினைப்பிலே சொன்னதெல்லாம் கேப்பாங்க

இதுவே திருமணத்திர்க்கப்புறம் family-politics ;)லெயிருந்து என்னை ஒரு கவசம் போல காத்தும் வருகிறது

இத்தனையும் என்னை குறித்து 5 விசித்திரம்
எனக்கு இந்த விளையாட்டிலே எனக்கு சேர்ட்டுவிட 5 பேரெல்லாம் கிடைக்கலை…3 பேர் தான் கிடைச்சாங்க
ஊசி
சந்திரசேகரன்
குமார்

திருட்டு VCD க்கப்புறம் திருட்டு-பதிவு…Plagarisim உடனே..உதவுங்கள்..

அன்புள்ள பிளாக் நண்பர்களுக்கு..
ன்னோட hacks ஐ நானே google பண்ணி பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு..அப்பிடி பார்த்தப்போ.. yahoo smilyes ஐ பதிவிலே இணைக்கும் முறை & பின்னூடங்களை எண்களாக தொடுப்பது எப்பிடி and change the imsge when the cursor moves over it ன்னு நான் ஆங்கிலத்திலெ போட்ட பதிவை அப்பிடியே காப்பியடிச்சு ஒருத்தர் பதிவு போட்டிருக்கார்.. அதுகூட பறவாயில்லை…
தானே அந்த மாற்றங்களை நிகழ்த்தியது போல் எழுதியிருக்கார்..

அட..spelling mistake கூட same-to-same ..ஈ -அடிச்சான் – காப்பி.
படத்தை பாருங்க..

அங்கே போய் view source லெ http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js பார்க்கலாம்..ஆங்கில பதிவுதான்..ஆனால்..எங்கேயுமே எனக்கு credits உம் இல்லை…தொடுப்பும் இல்லை..:((
Organising Comments with numbers
http://niezom.blogspot.com/2007/03/organise-your-comments-with-numbers.html


அவருடைய yahoo post
(http://niezom.blogspot.com/2007/03/add-yahoo-emotions-smileys-to-your-blog_21.html)

Change the image when the cursor moves over it http://niezom.blogspot.com/2007/03/change-image-when-cursor-moves-over-it.html
மூணாவது படத்துமேலே Cursor வைச்சு பாருங்க..என் English-template-tips பிளாகின் படம் தெரியும்

இதிலே நான் என்னோட home-page தொடுப்பு குடுத்தேனொ.. கண்டுபிடிச்சேன்..இல்லைன்னா.நான் இந்த பதிவை பார்த்தேயிருக்க் மாட்டேன்..

நான் வேணும்ன்னே தொடுப்பை.. link மாதிரி இல்லாமல்… copy paste பண்ணியிருக்கேன்…நீங்களும்..அங்கே போய் பாருங்கள்…:(( :((
செய்திக்குறிப்பு ON 28 March, 2003

சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு Delang என்பவரிடமிருன்து பின்னூடமாக ஒரு தகவல் வந்தது..அதாவது ..Niezom அவரது பிளாகில் எனது பதிவுகளுக்கு சுட்டியும்…கிரெடிட்டும் குடுத்திருப்பதாக சொல்கிரார்

delang said…
sorry interupting here, from what i see niezom already gave credit to ariginal hacker/blogger. you can see below every post written blog with …

3/26/2007 9:58 AM

இந்த பின்னூடத்துக்கு பிறகு…Delang ஐ நான் ஒரு பரஸ்பர நண்பராக கருதி…Niezom எனக்கு கிரெடிட் குடுத்திருக்கும் பக்ஷத்தில் எனக்கு இனிமேல் அவரிடம் எந்த த்வேஷமும் இல்லை ன்னு சொல்லியிருக்கேன்

Deepa said…
Hi delang
Welcome
I saw his page..
He seems to have removed the yahoo smiley post and posted Smiley Hacked Realease New Blogger whre he has linked back to me..
But then i dont undersntand the language used..
Form your comment.. I guess that he has given due credit

For chage image with curso post.. he has mentioed something as Blog gam*%$#^% with Change Image linking to this post.. again i dont understand

For the Flicker gallery post..(even though copy pasted) i dont see any link…

thanks for tell me though..
There are many who repat my posts in their blogs..I am not against it..Just a word with me..wuld have made things less distasteful.. thats all

You seem to be a mutual fried for both of us..So knindly tell him that Since he has given me the due credit (as you say)..i hold no hard feelings.. and I shall post an update regarding this in my post soon enough

thank you
Deepa

3/26/2007 10:49 AM

இன்று வரை எனக்கு இந்த தகவலை Niezom க்கு தெரிவிக்கப் பட்டுவிட்டதான்னு தெரியாது…எது எப்பிடி இருந்தாலும்..இந்த செய்திக்குறிப்பை போடணும்ன்னு எனக்கு தோணிச்சு…போட்டுவிட்டேன்

தர்பூஸ் Party..பாருங்க..சாப்பிடுங்க..எஞ்சாய் பண்ணுங்க

ங்க வீட்டு முன்னாடி நடந்த தர்பூஸ்-party யின் படம் உங்கள் பார்வைக்கு..


படத்திலெ பார்க்கிர அத்தனை பேரும்.. தினமும்..(உடம்புக்கு செரியில்லை அல்லது..வெளியூர் போனால்..) park க்கு வருபவர்கள்.. balcony லெயிருந்து இவங்களை பார்த்துகிட்டே இருந்தாலே.. நேரம் போகிறது தெரியாது..அவ்வளவு ஸ்வாரஸ்யமா இருக்கும்..நாளோரு கூட்டம்..பொழுதொரு வேதாந்தம் ன்னு இருப்பாங்க…இவங்க சர்ச்சை செய்யாத்த விஷயமே கிடையாது…அதை பத்தி இன்னோரு நாள் சொல்லறேன்.. இப்போ இவங்களை மாதிரி நீங்களும்..தர்பூஸ் சாப்பிட்டு..எஞ்சாய் பண்ணுங்க

கோடை விடுமுறைக்கு எங்களுக்கு லீவு கிடைக்குமா..?..?

Summer vacation க்கு இந்த வாட்டி ஏதாவது hill-station போயே தீரணும்ன்னு வீட்டுலெ ஒரே கலாட்டா.. எப்பவும் போல.. பெரியம்மா வீடு..சித்தப்பாவோட அத்தை பைய்யன் வீடு..அப்பிடி-இப்படின்னு சாக்கு-போக்கு சொன்னா நடக்காது, நாங்க சும்மா இருக்கமாட்டோம்…( பெரிய லெவெல்லெ.. பாட்டி-தாத்தாவை கூட்டு சேர்த்து மெரட்டல்)…அடுத்த வருஷம் hill-station போலாம்……அடுத்த வருஷம் hill-station போலாம்ன்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லி யேமாத்துகிர வேலையெல்லாம் இனிமே நடக்காது ன்னு பசங்கயெல்லாம்..விடுமுறையில்-வெளியூர்-மட்டுமே போராட்டம் , சத்யாகிரகம் , அழுது-அழிச்சாட்டியம் பண்ணி…

இது எதுவுமே வேலைக்காவலைன்னு கடைசியா ஒரு பிரம்மாஸ்த்திரம் விட்டாங்க பாருங்க…அதுல தான் நாங்க ரெண்டு பேரும் ஆடிப்போயிட்லோம்.. “Annual-Exams வருது.. நீங்க பிராமிச் பண்ணினாத்தான்..நாங்க படிப்போம்…இல்லைன்னா…படிக்காமேயே எக்ஸாமுக்கு போவோம்..”….சும்மா மெரெட்டலுக்கு சொன்னாங்களொ… நிஜமாவே சொன்னாங்களோ…எங்களுக்கு ஸப்த நாடியும் அடங்கி போச்சு..:(

ஒருவழியா..பேச்சுவார்த்தையெல்லாம் முடிஞ்சு..ஒரு பரஸ்பர தீர்மானத்திக்கு வந்தோம்..அதாவது நாங்க்ள் லீவு-சேமிப்பு-திட்டத்தை அடுத்த 2-3 மாதாத்திர்க்கு செயல்படுத்த மாட்டோம் AND உண்மையாவே லீவுக்கு அப்பிளை பண்ணி அதுக்கு தேவைவான நடவடிக்கையிலே தீவிரமா செயல்படுவோம் ன்னு ரெண்டு பேர் கிட்டேயும்..பாண்ட் பேப்பர்லெ எழுதாத்த குறையா வாக்குறுதி குடுத்திருக்கோம்…சாட்சியோட (வேறெ யாரு…தாத்தா – பாட்டி தான்)..

அப்புறம் வீட்டை பார்க்கணுமே.. இந்த பூனையா..பால் பாத்திரத்தை உருட்டி விட்டுதுன்னு… நாங்க சொல்லாமலே..நேரதுக்கு படிக்கிறதும்…பாட்டி Serial பாக்கும்போது.. பொறுப்பா.. ரூமுக்கு போய் கதவை சாத்தி ஜோரா படிக்கிரதும் (அதாவது சும்மா கதவை சாத்தி பாவ்லா காட்டலை..படிக்கத்தான் சிய்றோம்ன்னு)…தட்டுலெ போட்டதை..குத்தம்-குறை சொல்லாம சாப்பிடறதும்…அட..அட..நடந்ததெலாம் கனவா..நினைவா ன்னு நாங்க பிரமிச்சு போயிட்டோம்…

Then Reality hit us hard :-s

ஒரு நாள் – ரெண்டு நாள் லீவு எடுக்கவே இங்கே மூக்காலே அழவேண்டியிருக்கு…ரெண்டு பேருக்கும் சேர்ந்தாப்பல் லீவு sanction ஆச்சுன்னா..ஆபீஸ்லெயிருந்து வறப்போ பிள்ளையாருக்கு ஒரு சலாம் போட்டு 11-தேங்காயும் வடல்போட்டுத்தான் வீட்டுக்கே வருவோம்..(நாம கேட்ட வரத்தை ஜின் குடுத்திரிச்சில்லே)..இந்த லக்ஷணத்திலெ 15 நாள் லீவுக்கு அப்பிளிக்கேஷன் போடவே பக்கு-பக்குன்னு இருக்கு… காலேஜ் viva-voce எக்ஸாமுக்கு கூட நான் இவ்வளவு யோசிச்சதில்லே…ஹம்ம்

லீவுக்கு அப்ப்ளை பண்ணரதுக்கு முன்னாடி.. இதுவரை ஓ.பி அடிச்ச வேலையெலாம்..சட்டு-புட்டுன்னு முடிச்சு..நல்ல மூட்லெ இருக்கிரப்போ பார்த்து…ஆபீசுக்காக இதுவரை நான் எப்பெலாம் லீவெடுக்கலைன்னு பட்டியல் போட்டு ஞாபகபடுத்தி…(without sounding too obvious)..பிள்ளைகளுடன்..quality-time செலவிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு …இன்னும் ஒண்ணும் சொல்லலை….. இனிமே தான் இதெல்லாம் ஆபீஸ்லெ சொல்லி லீவு வாங்கணும்ன்னு… நாங்க ரெண்டுபேரும்.. ஒரு strategic planning பண்ணியிருக்கேம்…எவ்வளவு தூரம் வெற்றியடையறோம்ன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்..:-W

மாசிலா..உண்மை காதலே…

கண்முன்னே கண்ட காதல் காவியம்

ஆண் :-
மாசிலா..@};- உண்மை காதலே..:X..

மாறுமோ..சில-மனிதர் காதல் போலவே..:-*

பெண் :-
பேசும் வார்த்தை..உண்மை தானா.8->.

வடைய்யை அபேஸ் பண்ண நீங்கள் போடும் வேஷமா..:-W

Dignity & Decency.. Out-of-Fashion ஆயிடுச்சா :-?

லைபதிவர்களுக்கிடையே நடக்கும் தற்க்கங்கள் பலதும் நான் தொடர்ந்து கவனிச்சுகிட்டு வறேன்..இந்த விவாதங்கள் பலதும் ஸ்வாரஸ்யமா – சிந்தனையை தூண்டக்கூடியதா – உண்மைய்யை ஒட்டி இருக்கும் 😐 விவாதத்தில் என் அபிப்பிறாயத்தையும் சொல்லணும்ன்னு நினைப்பேன்..பின்னூடம் கூட சில நெரத்திலெ தட்டச்சு செய்து..இன்னும்-என்ன Publsih ன்னு மட்டும் தான் குடுக்கணும்..( என் பழக்கம் என்னன்னா..முதல்லே நான் சொல்லவேண்டியதை comment box லெ type பண்ணி வச்சுப்பேன்..அப்புறம் தான் மத்தவங்க comments ஐ படிப்பேன்..so that I dont want my initial thought to be influenced by what others had said.. அப்புறம் தேவைபட்டா பின்னூடத்திலெ மாற்றங்கள் செய்வேன்).செரி publsih பண்ணருதுக்கு முன்னே.. எனக்கு முன்னாடி வந்து பின்னூடம் குடுத்தவங்க்ளோட அபிப்பராயம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் ன்னு படிச்சா .. அட-சே .. What ever happend to good-old-fashoned dignity of expression ன்னு தொணிடும்..:(

நாமெல்லோரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுவிட்டோம்ங்கிறதை எல்லாரும் ஒத்துபீங்கன்னு நம்பறென். எல்லோருக்கும் கருத்து-ஸுதந்திரம் , (Freedom of Thought) & Freedom of expression (please give me its Tamil equivalant) இருக்கு.. அத்னாலதானே .. கைய்க்கு-வந்ததை தட்டறோம் – வாய்க்கு-வந்ததை பேசறோம் …Each person is entitled to his / her opinion இல்லையா.. ஒரே விஷயத்தை 2 பேர் கிட்டே சொன்னா 3 அபிப்பிராயம் கிடைக்கும்.. இதுலெ எது செரிங்கிறது அவங்க-அவங்க கண்ணோட்டத்தை பொறுத்து இருக்கு..

விவாதத்தின் நோக்கம் என்ன?.. எது செரி – எது தவறு ன்னு முடிவு செய்வதா?. ஹூஹ்ம்…. “விவாதம்”ன்னாலே.. அதுக்கு முடிவே இல்லை.. அப்புறம்.. விவாதம் செவதுக்கு என்ன காரணம் — ஒரே விஷயத்துக்கு பல அபிப்பிராயம் வரும்போது.. we widen our horizon.. things are put in a different prespective [-(

உதாகரணத்துக்கு சொல்லணும் ன்னா

விவாதாவிஷயம் : – சூர்யோதயம்
இதுக்கு சுமாறா இத்தனை அப்பிப்பிராயங்கள் வரலாம் .. depending on who says it

  • சூர்யன் கிழ்க்கில் உதயமாகிறது
  • யோகாசனம் செய்ய எவ்வளவு ரம்யமான சூழல்
  • இந்த க்ஷணத்தை நான் ஓவியமாக தீட்டப்போறேன்
  • என் கவிதைய்யை கேளுங்கள்
  • செ..அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சா…office க்கு சீக்கிரம் கிளம்பணும்
  • அய்யயோ… இன்னிக்கி பரீக்ஷை..பிள்ளையாரே காப்பத்துப்பா
  • நான் இன்னும் கொஞ்சம் தூங்கறேன்

எந்த ஒரு விவாதத்திலெயும்.. அவங்க-அவங்க அபிப்பிராயத்தை மரியாதைக்குறிய பாணியிலெ ஏன் சொல்ல மெனக்கிடறதில்லை..ங்கிறது தான் என்னோட வருத்தம்.. எல்லாரும் ” பொதுவாவே ” நல்லவங்களும் – பண்புள்ளவங்களும் தான்.. அப்புடி இருக்க…பதிவுக்கு / பின்னோடத்துக்கு எதிரா அபிப்பிராயம் சொல்லும்போது (அனானியாகவே இருக்கட்டுமே )..Is it so difficult to give your opposing views with a little Decency and Dignity.. Or is it more fashionable to be mean and Nasty while expressing yourselves

தொழில் சுத்தம்

இந்த ஹெர்பல் பியூடி பார்லர் தொழில்லெ எவ்வளவு கவனமா இருக்காங்கன்னு பாருங்க

ஹெர்பல்ன்னு பேரு போட்டு கண்ட-கண்ட Chemicals உபயோக படுத்தமட்டாங்க..போலயிருக்கே 😕 .. ஏன்னா .. கொஞ்சம் அப்படி chair கிட்டே பாருங்க.. எலுமிச்சம் பழம் தோலெல்லாம் காய வச்சிருக்கங்க..