6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்

பஞ்சபூதம் என்று நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவையை குறிப்பிடுகிறோம். இவைகளைப் போலவே நம்முள் இயங்கும் சுவைக்கும் நாக்கு, நுகரும் மூக்கு, பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், உணரும் சருமம் போன்றவைகளை பஞ்சேந்திரியங்கள் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரின் பஞ்சேந்திரியங்களும் அவற்றைச் சுற்றி இருக்கும் பஞ்சபூதங்களுடன் இயைந்து செயல்படுகின்றன. நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களும் இவற்றின் விளைவுகளே என்பதும் மறுக்க முடியாத உண்மை. பஞ்சேந்திரியம், பஞ்சபூதம் என்று ஆன்மீகச் சொற்ப்பொழிவுகளில் பரவலாகப் பயன்படுத்தபடும் சொற்கள்(கணனி) தொழில்நுட்பப் பகுதியில் ஏன் இடம்பெற்றுள்ளது என்று நீங்கள் குழம்பிப்போயிருந்தால் வியப்புஇல்லை .
இந்நாள் வரை கணனியம் (Computing.. not necessarily directly refer to computer) சார்ந்த எல்லாச் செயல்பாடுகள் நடைபெறும் டிஜிட்டல் உலகும், நாம் சுவாசிக்கும் (அதாவது பஞ்சேந்திரியங்களுடன் உறவாடும்) “நிஜ” உலகும் தனிதனியே இயங்குகின்றன. டிஜிட்டல் முறையில் தகவல்களை (கணனி)திரையிலும், அன்றாட வாழ்வில் காகிதங்களிலும், நாம் பார்க்கும் காட்சிகளிலும், படிக்கும் புத்தகங்களிலும், ஸ்பரிசிக்கும் பொருட்களிலும் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. இவ்விரு உலகிற்கும் இடைவெளி நாளுக்கு நாள் குறைந்துகொண்டு தான் வருகிறது. Pocket PC / Blackberry / iPhone போன்றவை தற்போதைய உதாரணங்கள்.
இவ்விரு உலகின் இடைவெளியை இன்னும் குறுகச்செய்கிறது பிரணவ் மிஸ்திரியின் ஆறாம்-அறிவு தொழில்நுட்பம் (6th sense Technology). மனிதன் என்றைக்குமே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்வது மட்டும் அல்லாமல், இந்த உணர்வின் அடிப்படையில் சில முடிவுகளையும் எடுக்கிறான். எந்நேரமும் கணனி முன்னால் இருந்தால் நமக்கே உரிய உணரும் திறனை மெல்ல மெல்ல இழக்க நேரிடுகிறது. கணனியை விட்டு காலார நடந்து வரலாம் என்று பூங்காவிற்குப் போனால், அடடா எவ்வளவு ரம்யமான காட்சி, டிஜிடல் கேமராவில் பதிவு செய்யலாமே என்ற எண்ணம் தோன்றிய கணமே, அதே காட்சியை உணர்ந்து ரசிப்பதை விடுத்து டிஜிட்டல் உலகில் நுழைந்துவிடுகிறான். ஆனால் அதே காட்சியை பாரதிராஜா மாதிரி கட்டம் கட்டி, கைகளை சொடுக்கினாலே படம் எடுக்கலாம் (கேமராவை வெளியே எடுக்காமல்) என்பது இந்த 6th sense technology யின் சிறிய உதாரணமே. Continue reading “6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்”

உள்ளங்கையில் உலகம் – கைப்பேசியில் இணையம்

தொழில்நுட்பம் வளர வளர, நம் “தேவை”களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் “வசதி உள்ளவர்கள்” வாங்கும் பொருட்களாக இல்லாமல், ” அத்யாவசியம்” என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் ‘நாம் வாழும் இந்த’ காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் – கைப்பேசியும் இல்லாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்டால், நாம் அதாவது தனிநபரான நீங்களும் நானும் அந்த வட்டத்துக்குள் இல்லை என்ற எண்ணம் தான் எழுகிறது.
10 வருடங்களுக்கு முன்பாக, வீட்டில் இணையத் தொடர்பை நிறுவ நிறைய யோசித்தோம். அப்பொழுதெல்லாம் வீட்டில் கணனி வாங்குவதே விரயம் என்று பலர் எண்ணினார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க, இணையத்தொடர்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலத்தில் Necessary Evil என்று சொல்லவது இணையத்தொடர்புக்கு மிகச்சரியாக பொருந்தும். தகவல் பரிமாற்ற துறையில் இருப்பவர்கள் இதன் வீர்யத்தை நன்கு அறிவார்கள். இது ஒரு புறம் இருக்க, இணையத்தொடர்பை நிறுவுவது முன்பை விட இன்று மலிவாகத் தான் உள்ளது. நாளுக்கு நாள் இணையப் பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணமாக்கூட இருக்கலாம்.
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களில் கணனியும் கைப்பேசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒன்று இல்லை என்றாலும், பல அலுவல்கள் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோம். இம்மாதிரி நேரங்களில் தான் கைப்பேசியில் இணையதளங்களை பார்வையிடுவதைக் குறித்து பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் வரும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது நடைமுறைக்கு சரிவருமா? அப்படியானால் ‘என் கைப்பேசியில் இதை எவ்வாறு பயன்பாட்டு நிலையில் வைப்பது” போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவது தான் இப்பதிவின் நோக்கம்.
கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில் நாம் ISP என்று சொல்லப்படும் Internet Service Provider களை கண்டறிந்து சந்தா விவரங்களை தெரிந்துகொள்வோம். உதா:- DataOne, BSNL, Sify போன்றவை. பிறகு இவற்றில் நமக்கு உகந்ததை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட ISP அலுவலகத்தில் விண்ணப்பத்தை குடுத்து, சந்தா தொகையையும் கட்டிவிட்டால், சில தினங்களில் கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், சில விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, “என்னிடம் Wireless Modem உள்ளது. இதை பயன்படுத்திதான் நான் மடிகணனியில் இணையத்தொடர்பு ஏற்படுத்துகிறேன். ஆகவே, இதே wireless modem த்தை பயன்படுத்தி என் கைப்பேசியிலிருது இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா?” என்றால் கண்டிப்பாக முடியாது. Modem தான் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் மூலாதாரம் என்றாலும், கணனி வேறு, கைப்பேசி வேறு. Chalk peice பயன்படுத்தி Slate இல் எழுதலாம், நோட்டுப்புத்தகத்தில் எழுத முடியுமா? நோட்டுபுத்தகத்தில் எழுத பேனா / பென்சில் தான் உகந்தது. கணனியில் பயன்படுத்தும் இணையத்திற்கும், கைப்பேசியில் பயன்படுத்தும் இணையத்திற்கும் இது தான் வித்தியாசம்.
அப்படி என்றால், கைப்பேசியில் எவ்வாறு இணையத்தொடர்பை ஏற்படுத்துவது?. இதற்கான குறிப்புகள் சில.

  1. Mobile phone model : –
    நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியில, இணைய பயன்பாட்டுக்கான சாதனங்கள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுக்கள். உதா:- கைப்பேசியில் உலாவி / கோப்புகளை படிக்கவும் மற்றும் தரவிறக்கம் – வலையேற்றுவதற்கான வசதி போன்றவை.
  2. Mobile Service Provider :-
    நீங்கள் சந்தாதாரராக இருக்கும் Mobile Service Provider (Airtel, Hutch, vodafone) இடம், கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதா என்று விவரமாக கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், நேரில் போய் விசாரிப்பது நல்லது. பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
  3. சந்தா விவரங்கள்
    அடுத்தது, இணையத்தொடர்புக்கான தனிப்பட்ட சந்தா விவரங்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். சில Mobile Service providers, மாதம்/ வாரம் / தினத்திற்கென்று ஒரு தொகை வைத்திருப்பார்கள். நீங்கள் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தினாலும், இல்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். வேறு சில Mobile Service Providers, பயன்பாட்டுக்கு ஏற்ப தொகை செலுத்தினால் போதும் போன்ற திட்டங்களையும் வைத்திருப்பார்கள். ஆகவே அவசரப்படாமல், நிதானமாக எல்லாவற்றையும் கேட்டு, புரிந்துக கொண்டு உங்களுக்கு சரியாக தோன்றும் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
  4. Data Download Charges :-
    கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்த மாத சந்தா என்ற தொகையை கட்டினாலும், இணையப்பயன்பாட்டில் இருக்கும் பொழுது, உலாவியில் தரவிறக்கப்படும் பக்கங்களின் அளவை சார்ந்திருக்கும் தொகையை தான் Data Download charges என்று சொல்வார்கள்.

    உதா:- உங்கள் கைப்பேசியில் இணையத்தொடர்புக்கான மாதச்சந்தா 500/- என்று வைத்துக்கொள்வோம். இணையத்தொடர்பு தான் கிடைத்துவிட்டதே! சும்மா இருக்கும் நேரம் எல்லாம் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறேன், வலைத்தளங்களை பார்வையிடுகிறேன் என்று தினம் 2-3 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3 மணி நேரத்தில், நீங்கள் பார்வையிட்டிருக்கும் பக்கங்களின் அளவை பொறுத்து Data Download Charges என்றொரு தொகை கணக்கிடப்படும். மாத கடைசியில் இணயத்தொடர்பு சந்தா 500/ மற்றும் Data Download Chareges 1000/- என்றும் பில் வரும்.

    ஆகவே நீங்கள் தேர்வு செய்திருக்கும் Mobile Service provider இடம், அவர்களின் திட்டத்தில் data download charges உண்டா? அப்படி உண்டு என்றால் அதன் விவரங்கள் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் இணையத்திலிருந்து பாட்டு / படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்கு இந்த Data Download Charges கூரையை தொடும் அளவிற்கு இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்

இவை அனைத்தையும் மனதில் பதியவைத்து உங்கள் Mobile Service Provider ஐ அணுகி விவரங்கள் சேகரித்து நன்கு ஆராய்ந்த பிறகே கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும் என்பதையே பரிந்துரைக்கிறோம்.
கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியும். “கைப்பேசியில் இணையம் தேவை தானா?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும். இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிட துவங்குங்கள், விடை தானாகவே கிடைத்துவிடும்.
— தீபா கோவிந்த்

Windows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.

தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமே “அத்தியாவசியம்” என்றிருந்த கணனி, இன்று, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், கல்விமையங்களிலும் கணனியின் பங்கை (கற்றுக்கொள்ள மட்டும் அல்ல, பிரயோகிப்பதிலும் கூட) அலட்சியப்படுத்த முடியாது. செலவு செய்து பொருட்களை வாங்கிக்குவித்தால் மட்டும் போதுமா, அவைகளை முறையே பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். இது சாதாரண மேசை – நாற்காலியானாலும் சரி, கணனி போன்ற உயர்தர பொருட்களானாலும் சரி.
Microsoft Security Essentials
Genuine Microsoft Operating system, அதாவது மைக்கரோஸாப்ட்டின் சான்றிதழ் பெற்ற Operating System ( xp, Vista, Windows 7) போன்றவற்றை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், மைக்கரோஸாப்ட் வெளியிட்டிருக்கும் இந்த பாதுக்காப்பு நிரலை கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம். இதை எப்படி நிறுவ வேண்டும், கோப்புகளை எப்படி சோதிக்க வேண்டும் என்பதை குறும்படம் மூலம் நன்கு விளக்கியுள்ளார்கள்.
AV Comparitives என்ற நிறுவனம், நச்சு நிரல்களிலிருந்து கணனியை பாதுகாக்கப் பயன்படுத்தும் நிரல்களை பரிசோதித்து பார்ப்பதில் தேர்ச்சி பெற்றது. இவர்களின் ஆய்வுப்படி, சோதனையில் பங்குபெற்ற 10 நிரல்களில், மைக்கரோசாப்ட்டின் இந்த பாதுகாப்பு நிரலி, எல்லா விதமான சவால்களையும் கடந்த மூன்று நிரல்களில் ஒன்றாகும்.
கணனியில் நச்சு நிரல் பாதுகாப்பு நிரலை நிறுவவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு (ஒன்றுக்கும் மேற்பட்ட) நச்சு-நிரல் நிரலியை நிறுவக்கூடாது. ஏனென்றால், ஒரு நிரலை சார்ந்த கோப்புகளை இன்னொரு நிரல் நச்சு-பாதித்த கோப்பு என்று தவறாக எண்ணும் சாத்தியம் உண்டு.
ஆகவே, நீங்கள் தற்போது பயன்படுத்தும் நச்சு-நிரல் பாதுகாப்பு நிரலியிலிருந்து மாறுபட்ட நிரலை பயன்படுத்த எண்ணினால், முதலாவதை நீக்கிவிட்டு, புதியதை நிறுவுங்கள்.
Windows FireWall protection


நம் வீடுகளில் கதவு முக்கியமான பங்கு வகிக்கிறது. நமக்கு விருப்பம் உள்ளவர்களை கதவை கடந்துவர அனுமதிக்கிறோம். ஆனாலும், வீட்டை சுற்றி (compund wall) சுவர் / முள் வேலி எழுப்புகிறோம். ஏனென்றால், விருப்பமற்ற/ தேவை இல்லை என்று கருதுவதை எல்லாம், வீட்டு வளாகத்துக்குள் வராமல் தடுப்பது தான் இந்த சுவரின் நோக்கம். இந்த வேலையைத்தான் கணனியில் Firewall செய்கிறது.
Anti-Virus நிரல்கள் (நாம் Scan Now அன்று சொல்லிய பிறகு) நச்சு நிரல் பாதித்த கோப்புகளை கண்டுபிடித்து, அவைகளை நீக்குமாறு நமக்கு பரிந்துரைக்கிறது. ஆனால் Firewall, நச்சு நிரல்களை, கணனியில் தரவிறக்கம் ஆகும் முன்னே நமக்கு எச்சரிக்கை விடுகிறது. ஆகவே தான் இதை வீட்டை சுற்றியிருக்கும் மதிர்ச்சுவருடன் ஒப்பிடுகிறோம்.
உங்கள் கணனியில் உள்ள Start -> Control Panel -> Security Settings, இல் மைக்கரோஸாப்ட் அளித்துள்ள Firewall ளிடம் கோப்புகளை எப்படி கையாளவேண்டும் என்பதை குறிப்பிடலாம். மேற்படி விவரங்களை – Windows XP பயன்படுத்துபவர்கள் / Windows Vista பயன்படுத்துபவர்கள் இங்கே விளக்கப்படத்துடன் பார்க்கலாம்.
Windows Updates :-


சில சமயங்களில் கணனியின் வலது மூலையில், மஞ்சள் நிறத்தில் ஒரு சிறிய பெட்டி வந்து போகும், “Ready to install updates” என்று. சிலர் இதை தொந்தரவாக நினைத்து, “Update Later” என்று சொல்லி, பிறகு மறந்து விடுவார்கள். அந்த நிமிடம் இது தொந்தரவாக தெரிந்தாலும், கணனி பாதுகாப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. முன்-வாசல், பின்-வாசல், மாடிக்கு போகும் வழி, காம்பவுண்ட் சுவரில் இருக்கும் இரும்புக்கதவு என்பதை எல்லாம் சரிபார்த்து பூட்டுவது தொந்தரவாக இருக்கும், ஆகவே இதையெல்லாம் திறந்தே வைக்கிறேன், என்று சொல்வதற்கு சமமாகும் . Windows Updates ஐ புறக்கணித்துவிட்டு, என்னதான் உயர்தர நச்சு-நிரல் பாதுகாப்பு நிரல்களை நிறுவினாலும், சில சதவிகிதம் தான் பாதுகாப்பு பெற முடியும். முழுமையான பாதுகாப்பு பெற, Windows updates ஐ சரியாக கண்காணித்து புதுப்பிப்பது சிறந்தது.
உலாவியுடன் ஒட்டி செயல்படும் தரமான சொருகி-நிரல்களையும் (plug-in) புதுப்பிக்க வேண்டும்


Adobe Acrobat Reader / Adobe Flash player போன்று உலாவியுடன் ஒட்டி செயல்படும் இந்த சொருகி-நிரல்கள் இணைய பயன்பாட்டில் தவிர்க்க முடியாதது. Adobe நிறுவனம் புதிது புதிதாய் வரும் நச்சு-நிரகளிலிருந்து இதன் சொருகி-நிரகளை பாதுகாக்க, வேண்டிய முறைகளை மேம்படுத்தி, நிரல்களை புதுப்பிக்கச் சொல்லி தகவல் விடும். இம்மாதிரி தரமான சொருகி-நிரல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதும், நச்சு நிரல்களை தரவிறக்கம் ஆகாமல் தவிர்க்க முடியும்.
எச்சரிக்கையுடன் செயல்படுவது


“சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை” என்பது போல், அறிமுகம் இல்லாத தளங்களிலிருந்து / நபர்களிடமிருந்து வரும் சுட்டிகளை / கோப்புகளை தரவிறக்கம் செய்யாதீர்கள். இவைகளை தரவிறக்கம் செய்தே ஆகவேண்டும் என்றால், தனித்தனியாக Anti Virus மூலம் சோதித்து பார்க்கவும். இன்னும் அதிகப்படியாக சோதிக்க வேண்டும் என்றால், Virus Total போன்ற தளத்தில் குறிப்பிட்ட கோப்பை வலையேற்றி, சோதனைச் செய்யவும். இந்த தளம் பல நச்சு-நிரல் பாதுகாப்பு தளங்களுடன் ஒத்து செயல்படுவதால், குறிப்பிட்ட கோப்பின் நம்பகத்தன்மையை விவரமாக பரிசோதிக்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும்போது, நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப் போடச் சொல்லி வலியுறுத்துவார்கள். பலர் கைப்படும் காரணத்தினால், கையாளும் முறை வேறுபடும். இதனால், குறைந்தது ஒரு வருட காலமாவது, அந்த புத்தகம், பயன்பாட்டு நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் பள்ளி மற்றும் பெற்றோரின் எண்ணம். அதே மாதிரி, கணனியிலும், கையாளும் முறை மாறுபடும். இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்வது, USB-Stick க்கில் கோப்புகளை ஏற்றுவது, பகிர்ந்துகொள்வது, குடும்பத்தில் எல்லோரும் ஒரே கணினியை பயன்படுத்துவது போன்றவை (பலர்) கையாளும் முறைகளாகும். இக்காரணத்தினால், கணனியில் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள்வது சாலச்சிறந்தது. Spyware, Malware, Adware போன்றவை எம்மாதிரியான விபரீத விளைவுகளைத் தரும் என்று முன் பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இம்மாதிரி பாதுகாப்பு முறைகளை / நிரல்களை பயன்படுத்துவதற்கு அதிகப்படியாக பணம் செலவு செய்ய வேண்டியதில்லை என்பது உபரி தகவல்.
— தீபா கோவிந்த்

உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்

சிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.
நம்மில் எத்தனை பேருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று எனக்குத் தெரியாது, ஆனால், எல்லோருக்குமே (கடவுளின்) படைப்பின் மீது நம்பிக்கை உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். கதை, கவிதை, ஓவியம், நாடகம் போன்ற, மனிதர்கள் “படைக்கும்” விஷயங்களில், படைப்பு உருவாகுவதற்கு காரணமாய் இருக்கும் ஆரம்ப நிலையை Conception அதாவது கருக்கொள்ளுதல் என்று சொல்லுவோம். ஏன் தெரியுமா? கருக்கொள்ளுதல் என்பது (கடவுளின்) படைப்பின் ஆரம்ப நிலை. இந்த நிலை இல்லையென்றால் நீங்கள் இல்லை – நான் இல்லை – பிறகு என்ன இருந்தால் நமக்கென்ன?
சிசுவின் பிறப்பு என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை “பத்திரமாக” இருக்கச் சொல்கிறோம். கரு “நிலைக்க / தங்க” வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.
கருவின் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குவது இந்த stem cells தான். இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி “நாம்” உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே “சரியாகிறது”. சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் “ஒட்டிக்கொள்கிறது”.
ஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு. (..Bone marrow வில் தான் Stem cells உற்பத்தியாகின்றன .. என்று சொன்னேனே.. நினைவிருக்கிறதா !!)
எலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லயென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் (..அறுவை சிகிச்சை என்றாலே பலர் ஒதுங்கி விடுவார்கள்). இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.
சரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம்?. கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.
Ø இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)
Ø தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogenic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.
Ø இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்
இம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, Osteoarthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.
சில Bone marrow donor’s இன் தசை, நோயாளியின் தசைகளுடன் ஒத்துப்போனாலும் (Histological compatiblity அல்லது Tissue Compatiblity) எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு வளரும் தசை ஒத்துப்போகாமல் சிக்கல்களை தரலாம். இதை Graft Versus Host Disease – GVHD என்று சொல்வார்கள். இது எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு, சிகிச்சையின் வீரியத்திலிருந்து மீண்டுவரும் பொழுது தான் தெரியவரும். இப்படி இருப்பின், இதுவரை செய்த முயற்சி எல்லாமே வீண்.
ரத்த வங்கி போல், தொப்புள்க்கொடி ரத்தத்தை பாதுக்காக தனிப்பட்ட வங்கிகள் உண்டு. இவைகளை Cord Blood Bank என்று சொல்லப்படுகிறது. இவை இரெண்டு வகைப்படும்.
ü Private Cord Blood Bank :- கட்டண முறையில் தொப்புள்கொடி ரத்ததை இங்கு பத்திரப்படுத்துகிறார்கள். இன்று பிறக்கும் சிசுவிற்கு பிற்காலத்தில் தேவை ஏற்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெற்றோர்கள் இதை செய்கிறார்கள். இம்மாதிரி தனியார் முறையில் செயல்படுவதால் வருடாந்திர கட்டணம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லலாம். உடமையாளர் அனுமதி இல்லாமல் ஒருவரின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரால் பெற முடியாது.
ü Public Cord Blood Bank :- இங்கு எந்த கட்டணமும் இல்லாமல் தொப்புள்கொடி பத்திரப்படுத்தலாம். தேவையானவர்கள் விண்ணப்பத்துடன் அவரவர் தசையின் குறிப்பையும் குடுத்து வங்கியிலிருந்து தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளலாம்.
உலகில் எல்லா இடங்களிலும் தொப்புள்க்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகள் இல்லையென்றாலும், முக்கிய நாடுகளில் கண்டிப்பாக உண்டு. காலப்போக்கில் ஊருக்கொரு ரத்தவங்கி போல், தொப்புள்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகளும் விரைவில் வரக்கூடும். உங்கள் சிசுவின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரின் உயிர்காக்கும் என்றால் மனதுக்கு நிறைவு தானே.